பொது அமைதிக்கு குந்தகம் ஆட்டோ டிரைவர் கைது
ஓசூர்:தேன்கனிக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் அருணாச்சலம், 27, ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் ஓசூர், காந்திநகர் சப் கலெக்டர் பங்களா பின்புறம், நின்று கொண்டு பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் பேசியுள்ளார். அவ்வழியாக ரோந்து சென்ற ஓசூர் டவுன் போலீசார், அவரை அங்கிருந்து கிளம்புமாறு கூறியும் கேட்கவில்லை. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டதாக கூறி, அருணாச்சலத்தை போலீசார் கைது செய்தனர்.