ரூ-.5,000 கடன் கொடுக்க மறுப்பு தொழிலாளியை தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் அருண், 18, கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் அமீன்தாஸ், 35. கடந்த, 3ல், அருணிடம், அமீன்தாஸ், 5,000 ரூபாய் கடன் கேட்டார். பணம் தர மறுத்த அருணை, அமீன்தாஸ் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அருண் கொடுத்த புகார்படி, கந்திகுப்பம் போலீசார் அமீன்தாஸை கைது செய்தனர்.