உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, கல்லுாரி மாணவரிடம், 6.25 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர் கைதானார்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையை சேர்ந்தவர் லோேகஷ். 47. இவர் பொதுப்பணித்துறை மேற்பார்வையாள-ராக பணியாற்றிய போது, லஞ்சம் பெற்ற புகாரில் கடந்த, 2016 ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவர் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆட்டோ கேரேஜூக்கு வந்து சென்றபோது, தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கும் பிரித்வி, 21 என்ற மாணவருடன் பழக்கம் ஏற்-பட்டது. அவருக்கு பொதுப்பணித் துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, 6.25 லட்சம் ரூபாயை அவரிடம் வாங்கி-யவர், சில நாட்களுக்கு முன், பணி நியமன உத்தரவை வழங்-கினார்.அதை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்ற-போது தான், இது போலி என தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அளித்த புகார் படி, லோகேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே மேலும் மூவர், இதேபோல புகாரளித்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !