வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை ஊத்தங்கரை, அக். 19-ஊத்தங்கரை, தீயணைப்புத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஒத்திகை, சாமல்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.வடகிழக்கு பருவமழையின்போது, எவ்வித அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகள் செய்து, மக்களை காப்பாற்றுதல் தொடர்பாக ஒத்திகை நடந்தது. ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அந்தோணிசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.