உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்னல்-வாடி பஞ்., மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் வரும் உள்ளாட்சி தேர்-தலில் ஒன்னல்வாடி பஞ்.,க்கு தலைவர் மற்றும் வார்டு உறுப்பி-னர்கள் தேர்தல் நடக்காது. வரும் ஜன.,6 ம் தேதியுடன் ஒன்னல்வாடி பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால், பஞ்.,த்தில் கடைசியாக பதவி வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்-தது. பஞ்., தலைவர் மாதேஷ் தலைமை வகித்து, 9 வார்டு உறுப்-பினர்கள், துணைத்தலைவர் யோகானந்தாரெட்டி, ஒன்றிய கவுன்-சிலர் ரமேஷ், பஞ்., செயலர் பாலச்சந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கேடயம், நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி, 5 ஆண்டு சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ