ரூ.34 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூஜை
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், பீர்பள்ளி கிராமத்தில் இருந்து, ஆண்டியப்பன் கோட்டை கிராமம் வரை புதிய தார்ச்சாலை அமைத்து தர, பொது-மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கனிமங்களும், குவாரிகளும் திட்டத்தில், 34.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, சூளகிரி ஒன்றியக்-குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்ட-றிந்தார். பி.டி.ஓ., உமாசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத், ஒன்றிய கவுன்சிலர் சேட்டு உட்பட பலர் பங்கேற்-றனர்.