ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை
ஆஞ்சநேயர் கோவிலில்புரட்டாசி சிறப்பு பூஜைஓசூர், செப். 29-தேன்கனிக்கோட்டை அடுத்த கலகோபசந்திரம் கிராமத்தில், ஜெய வீர அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி, 2வது சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நாகராஜ் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.