மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
10-Feb-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள தியான-துர்க்கம் வி.ஏ.ஓ., செந்தில் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அகரம் முருகன் கோவில் அருகே, ஓசூர் - உத்தனப்பள்ளி சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக, 2 யூனிட் கற்களை உத்தனப்-பள்ளியில் இருந்து ஓசூருக்கு எடுத்து செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Feb-2025