உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் மீது டூ -- வீலர் மோதல்: இருவர் பலி

பஸ் மீது டூ -- வீலர் மோதல்: இருவர் பலி

கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அருகே, அரசு பஸ் மீது மோதியதில், டூ -- வீலரில், 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட, இருவர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, யானைக்கால் தொட்டி பிரிவு சாலை அருகே, நேற்று மாலை, 4:20 மணிக்கு, அரசு பஸ் பேரிகை நோக்கி சென்றது. பஸ்சை காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்த சஞ்சீவன், 29, ஓட்டினார். எதிரே, கிருஷ்ணகிரி புதுப்பேட்டையை சேர்ந்த மணிவண்ணன், 62, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், கொரமடுகு கிராமத்தை சேர்ந்த முரளி, 43, ஆகியோர் டூ - வீலரில் வந்தனர். சாலை வளைவில், அரசு பஸ்சின் முன்பகுதியில் டூ - வீலர் மோதியதில் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேப்பனஹள்ளி போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விசாரித்தனர். மணிவண்ணன், வேப்பனஹள்ளியில் பத்திர விற்பனையாளராக இருந்தார். கர்நாடகா மாநிலம், பூதிக்கோட்டை கிராமத்திலுள்ள தன் மகளை பார்த்து விட்டு, கிருஷ்ணகிரி நோக்கி வந்தார். கோலார் மாவட்டம், கொரமடுகு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி, வேப்பனஹள்ளி மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள தன் மனைவியை பார்க்க, அவரிடம், 'லிப்ட்' கேட்டு டூ -- வீலரில் வந்தது தெரிந்தது. விபத்து நடந்த, சாலை வளைவின் இருபுறமும், செடிகள் வளர்ந்து கிடப்பதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அதனால், அடிக்கடி விபத்து நடப்பதாக, அப்பகுதியினர் குற்றச்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !