மேலும் செய்திகள்
திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம்
28-Dec-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி புதிய, 3வது வார்டு பழையபேட்டை பங்-காளித் தெருவில், புனித இஞ்ஞாசியார் ஆலயம் அருகில், சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாயின் மேனுவல் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் விபத்தை தவிர்க்க, அப்பகுதியினர் பெரிய கற்களை பள்ளத்தில் குவித்து வைத்துள்ளனர். இதனால், இரவில் அப்பகு-திக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள், அந்த கற்களில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கார் உள்ளிட்ட, 4 சக்கர வாக-னங்கள் செல்ல முடிவதில்லை. கடந்த, 15 நாட்களாக உள்ள இப்-பள்ளத்தை சரிசெய்ய, கிருஷ்ணகிரி நகராட்சியில் புகார் தெரி-வித்தும், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என, அப்ப-குதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், அந்த பள்-ளத்தை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய, வாகன ஓட்டி-களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Dec-2024