கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 847 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதி மற்றும் அணையில், 12 மி.மீ., மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 908 கன அடியாக அதிகரித்தது.அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 761 கன அடியும், வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என மொத்தம், 849 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரையும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.