கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 20ல், 124 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று, 245 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து இடது, வலது புற கால்வாயில் மொத்தம், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 128 கன அடி என மொத்தம், 307 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.50 அடியாக நீர்மட்டம் இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தளியில், 20 மி.மீ., ஓசூர், 12, தேன்கனிக்கோட்டை, 4, கெலவரப்பள்ளி, 3 மி.மீ., என மொத்தம், 39 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. பாரூர் பெரிய ஏரி தன் மொத்த கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும், 48 கன அடி நீர் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நீர்மட்டம், 4.70 அடியாகவும், சூளகிரி சின்னாறு அணையின் மொத்த உயரமான, 32.80 அடியில் நீர்மட்டம், 7.22 அடியாகவும் உள்ளது.