மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
1 hour(s) ago
ஓசூர், கேரளா மாநிலம், கொச்சினை சேர்ந்தவர் ஜோசப், 56. சூளகிரி அருகே ஒமதேப்பள்ளியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள ஓட்டலின், 3வது தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி விழுந்த அவர் படுகாயமடைந்தார். ஜோசப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜோசப் இறந்து விட்டார்.இது குறித்து, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago