உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

பவானி: சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம், அண்ணா வீதியை சேர்ந்தவர் மகமூத், 45; சாணை பிடிக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. காலிங்கராயன்பாளையத்தில் ஒரு ஸ்டாண்டில் அவருடைய இரு-சக்கர வாகனம் நேற்று நிறுத்தப்பட்டிருந்ததை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். வாகனத்திலேயே சாவி, செல்போன், பர்ஸ் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சமீராபானு, சித்-தோடு போலீசில் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ