உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம் நடந்தன. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகல் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டை தக்ஷ்ண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை