உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், கெலமங்கலம் அருகே அனுசோ-னையை சேர்ந்தவர் ராஜூ,40; டிரைவர். இவரது வீடும், அவரது சகோதரர் முனுசாமி வீடும் அருகருகே உள்ளன. முனுசாமி பெங்-களூருவில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்; நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு முனுசாமி வீட்-டிற்குள் சத்தம் கேட்டதால், ராஜூ அங்கு சென்று பார்த்தார்.அப்போது, முனுசாமி வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூ-ரையை உடைத்து, மர்ம நபர் உள்ளே புகுந்து திருட முயன்றது தெரிந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்த ராஜூ, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், கெல-மங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த தமிழரசன், 28, என்பது தெரிந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை