உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய் கடித்து சிறுவர்கள் காயம்

நாய் கடித்து சிறுவர்கள் காயம்

திருமங்கலம் : கப்பலுார் பகுதியில் நேற்று காலை வெறிபிடித்த நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆதி கேசவன் 5, ஸ்ரீ கிருஷ்ணன் 2, மற்றும் ராணி 55, ஆகியோரை கடித்தது. அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் 12க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dr.Arun
ஜூன் 29, 2024 00:44

முதலாவதாக நாய்களை வேறு இடங்களில் பிடிப்பவர்கள் கன்னியாகுமரி- பெங்களூரு நான்கு வழிச் சாலையில் திருமங்கலம் கீழமாத்தூர் இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மொத்த மொத்தமாக இரசிக்கிவிட்டுச் செல்கின்றனர். அதனால், நாகமலை புதுக்கோட்டை மகா கணபதி நகர், கணேஷ் நகர், மலையன் நகர், கப்பலூர், திருமங்கலம், தனக்கன்குளம் பர்மா காலனி பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்து அந்தப் பகுதியில் வசித்து வருபவர்களை அச்சுறுத்தி கடித்து வருகின்றன. இதை முதலாவதாக காவல் துறைமூலம் கண்காணித்து நாயை இறங்கி விடுபவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்தப் பகுதிகளில் சுற்றிவரும் நாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை