| ADDED : மே 11, 2024 06:04 AM
விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை 1ல், நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில், 32 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி ஒருவர், 4 வயது மகனுடன் ரயிலுக்கு காத்திருந்தார். அப்போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு தரையில் படுத்து உருண்டார்.தகவலறிந்த ரயில்வே போலீசார், அங்கிருந்த பெண் பயணியருடன் சேர்ந்து, கர்ப்பிணிக்கு முதலுதவி அளித்தனர். அப்போது, அவருக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வரத் துவங்கியது.உடன் அங்கிருந்த பெண் ஒருவர், தான் வைத்திருந்த புடவையை அரணாக மாற்றி, பிரசவம் பார்க்கத் துவங்கினார். நள்ளிரவு 2:30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.