ஆர்ப்பாட்டம்
மேலுார்: மேலுாரில் பென்னிகுயிக் ஒருபோக பாசன சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் குறிஞ்சி குமரன் தலைமை வகித்தார். விவசாய கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். நிர்வாகிகள் கல்லானை, ரவிச்சந்திரன், ஆனந்த குமரன், அ.ம.மு.க., ஆசையன், அ.தி.மு.க., சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.