உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் கலந்துரையாடல்

கல்லுாரியில் கலந்துரையாடல்

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். விவசாயிகளுக்கான ஏ.டி.டி. 54 ரக நெல் விதை, குதிரைவாலி விதை, தார்ப்பாலின் பை, தென்னங்கன்று, தென்னை டானிக் போன்றவற்றை வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் வழங்கினார். டீன் மகேந்திரன், உழவியல் துறை பேராசிரியர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்