ரோடு ஓரங்களில் வீசப்படும் மதுபாட்டில்களால் அதிருப்தி
பேரையூர்: பேரையூர் பகுதியில் மேய்ச்சல் நிலம், ரோட்டோரம் மது பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இப்பகுதி, பெரும்பாலும் விவசாயம் சார்ந்துள்ளது. இங்கு விவசாயிகள் அதிகளவில் கால்நடைகளை வளர்க்கின்றனர். கூலித்தொழிலாளர்கள் வருவாய் பெறும் வகையில் கறவை மாடுகள் வளர்க்கின்றனர். ஆடு மற்றும் மாடுகளை குட்டை மற்றும் நீர்நிலை ஓரத்தில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். ரோட்டோரம் ஆங்கங்கே, காலி மது பாட்டில்கள் உடைந்தும், பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டிக்கிடக்கின்றன.ரோட்டோரம் புற்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகள், புற்களுடன் சேர்த்து பிளாஸ்டிக் பொருட்களை உணவாக உட்கொள்ளும் நிலை உருவாகிறது. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது. காயம் அடைந்த ஆடு, மாடுகளை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் பல சிரமங்கள் உள்ளது. எனவே கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்க, இவ்வாறு காலி மது பாட்டில்களை வீசுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.