தீத்தடுப்பு பயிற்சி
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே காமராஜர் இன்ஜினியரிங் கல்லுாரி என்.சி.சி., மாணவர்களுக்கு தீத்தடுப்பு, மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கர்னல் ராகேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் முன்னிலை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் பொன் திருமுருகன், நிலைய அலுவலர்கள் ரவிக்குமார், வரதராஜன், குமார் மற்றும் வீரர்கள் பயிற்சி அளித்தனர்.