உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி நுாற்றாண்டு, ஆண்டு மற்றும் விளையாட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை வகித்தார். தி.மு.க., விவசாய அணி முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார். பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகர செயலாளர் சத்தியபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர்கள் திருமுருகன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை