| ADDED : ஆக 09, 2024 12:58 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி, செல்லம்பட்டி வட்டார துவக்க, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான 11, 14, 17, 19 வயது மாணவர்களுக்கான குறுவட்ட செஸ் போட்டிகள் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர்கள் குறுவட்டப் பொறுப்பாளர்கள் துவக்கி வைத்தனர்.ஹேண்ட் பால் போட்டிகள்: மாணவர்களுக்கான 14, 17, 19 வயதிற்கான மூன்று பிரிவுகளிலும் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கான 14, 17 பிரிவுகளில் கேரன் பள்ளியும், 19 வயது பிரிவில் வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர்.