உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்

ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடிமரத்திற்கு பூஜாரி சண்முகவேல் தீபாராதனை காட்டினார். பின் அம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பூக்குழி, அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவங்கினர். 17 நாள் நடக்கும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 18 ல் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கு, 19ல் பூக்குழி இறங்குதல், 25ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருள்கிறார். விழா ஏற்பாடுகளை மண்டகபடிகாரர்கள், நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி