உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்கள்

நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்கள்

மதுரை; சேடபட்டி நாகமநாயக்கன்பட்டியில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.இயற்கை வேளாண் பயிற்றுநர் வேலுச்சாமி பேசுகையில் ஆடிப்பட்டத்தில் பஞ்சகவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல், திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி அதிக மகசூல் பெறலாம்'' என்றார்.வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி, துணை வேளாண் அலுவலர் பாண்டியன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா ஆகியோர் பயிர் தொழில் நுட்பங்களை விளக்கினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா ஏற்பாடுகளை செய்திருந்தார். வேளாண் உதவி அலுவலர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ