மேலும் செய்திகள்
குன்றத்து கோயில்களில் கோகுலாஷ்டமி பூஜை
27-Aug-2024
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றத்தில் செப். 27ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் எடுக்கும் விழா நடக்க உள்ளது.நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீது பாறையில் கீரி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும், திருப்பரங்குன்றம் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலை மலைமேல் கொண்டு செல்லும் விழா செப். 27ல் நடக்கிறது. அன்று மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு மற்றும் பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்படும். பின்பு பல்லக்கில் வேலை வைத்து ரத வீதிகளில் உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்பிரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும்.உச்சி கால நேரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, கோயில் சிவாச்சாரியார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி வீதி உலா முடிந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்படும்.
27-Aug-2024