| ADDED : ஆக 02, 2024 05:08 AM
வங்கி ஊழியர் மீது மோசடி வழக்குதிருமங்கலம்: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வங்கியில் சிலைமானைச் சேர்ந்த நந்தகுமார் ஊழியராக இருந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மகளிர் குழுவில் 10 பேர் உறுப்பினர்கள் உள்ளதாக போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். முதல் தவணை தொகையை வசூலிக்க சென்ற ஊழியர்கள், குறிப்பிட்ட மகளிர் குழு நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் கடன் வாங்கவில்லை என தெரிவித்துள்ளனர். விசாரணையில் நந்தகுமார் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. வங்கியின் மகளிர் குழு லோன் பிரிவு மேலாளர் சதீஷ் கண்ணன் புகார் செய்தார். திருமங்கலம் நகர் போலீசார் நந்தகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆம்புலன்ஸ் மோதி பலிதிருமங்கலம்: சிவரக்கோட்டை அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் 35. நேற்று முன்தினம் இரவு சமத்துவபுரம் அருகே நான்கு வழிச் சாலையில் ஆட்டோவில் ரோட்டை கடக்க முயன்றார். விருதுநகரில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.மைனர் பெண்ணை மணந்தவர் மீது வழக்குதிருமங்கலம்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தையும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். பாட்டியின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார். அவரை கள்ளிக்குடி அருகே மொச்சிகுளத்தை சேர்ந்த மருதலிங்கம் 24, காதலித்து வந்துள்ளார். விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணமும் செய்துள்ளார். சிறுமிக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்துள்ளது. கள்ளிக்குடி ஊர் நல அலுவலர் முத்துலட்சுமி புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.----முதியவர் பலிகொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் பொன்குழியான் 67, கல் உடைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை கருங்காலக்குடி பகுதியில் குடிநீர் எடுக்க ஊருணிக்கு சென்றவர் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்ததில் இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.போக்சோவில் ஒருவர் கைதுகொட்டாம்பட்டி: முகண்டகிரிபட்டி சசிக்குமார் 23, இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தும் போது அதே ஊரை சேர்ந்த உறவினர் பெருமாள் 43, பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் 'போக்சோ' சட்டத்தில் சசிக்குமாரை கைது செய்தனர்.மூன்று பேர் கைதுமேலுார்: தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்னமருது 26, விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு துாங்கினார். அவர் கையில் அணிந்திருந்த வெள்ளிச் செயினை மர்மநபர் கழற்றவே சுதாரித்து எழுந்தார். செயினை கழற்றியவர் மற்றும் சின்னமருதுவின் டூ வீலரின் பூட்டை உடைத்த மூன்று பேர் தப்பினர். மேலுார் போலீசார் ஒத்தக்கடை செல்வகுமார் 19, ராஜா 23, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.