வெறிநாய் கடிக்கு 35 கால்நடைகள் பலி
மேலுார் : கிடாரிப்பட்டியில் மனிதர்கள், கால்நடைகளை வெறி நாய்கள் விரட்டி கடிக்கின்றன. வெறிநாய் கடிக்கு பாதிக்கப்பட்ட கால்நடைகள், வெறி பிடித்து எச்சில் வடிய ஆரம்பித்த 5 நாட்களில் இறந்து விடுகின்றன. இதுவரை 4 ஆடுகள், 23 கன்றுகள், 8 மாடுகள்உள்பட 35 கால்நடைகள் பலியாகி உள்ளன. நேற்று உஷா என்பவரின் பசு மாடும் இறந்தது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வுகாண வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.