52 புகார்களுக்கு தீர்வு
வாடிப்பட்டி: சமயநல்லுாரில் போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமை வகித்தார். வாடிப்பட்டி, அலங்காநல்லுார், நாகமலை புதுக்கோட்டை, சோழவந்தான், சமயநல்லுார், காடுபட்டி, பாலமேடு ஸ்டேஷன்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பொதுமக்களின் சொத்து, பணம், குடும்ப பிரச்னை குறித்து விசாரிக்கப்பட்டு 52 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.