65 மனுக்களுக்கு தீர்வு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி டி.எஸ்.பி.,யின்கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவை மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. 185 மனுதாரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 100 பேர் பங்கேற்றனர். இதில் 65 மனுதாரர்கள் சமரசமாகினர். 35 மனுதாரர்களுக்கு தீர்வு காணப்படாததால் நீதிமன்றத்தில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.