ஏப்.10 இறைச்சி கடைக்கு தடை
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் ஏப். 10 மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அன்று ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இறைச்சி விற்பனை செய்யும் கடைகளையும் திறக்கக்கூடாது. மீறினால் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, பொது சுகாதாரச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.