திருடியவர் கைது
மதுரை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பாவு 72. மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள பயணிகள் காத்திருப்போர் அறையில் தங்கிய நிலையில் அவரது அலைபேசி திருடு போனது. கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது தேனி அல்லிநகரம் அரசாங்கம் 30, திருடியது தெரிந்தது. அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.