விழிப்புணர்வு முகாம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாய் பாலிடெக்னிக் கல்லுாரியில் எஸ்.பி., அரவிந்த் உத்தரவுபடி போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., சரவண ரவி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பொம்மையச்சாமி, புள்ளியியல் ஆய்வாளர் வில்வபதி, எஸ்.ஐ., கிருஷ்ணபாண்டி பேசினர். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.