விழிப்புணர்வு
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மதுவிலக்கு துறை இயக்க மேலாண்மை சார்பில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ., பழனி துவக்கி வைத்தார். மதுரை வியர்வை வீதி கலைக்குழு ஜெயக்குமார் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.