உண்டியல் திருட்டு
பேரையூர் : பேரையூர் அருகே பூசாலபுரம் ஒச்சாண்டம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உண்டியலை திருடிச் சென்றனர். நேற்று காலை பூஜாரி காசிமாயன் கோயிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை காணவில்லை. அவர் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.