/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சிவசிங். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம், ஒரு மருத்துவமனை அருகே உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தனர். நிலத்திற்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்தனர். இவர்களின் பெயர்கள் கூட்டுப் பட்டா, வருவாய்த்துறையின் இதர ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய, ஏலம்விட இயலாது. அந்நிலத்தை கோயில் பெயரில் பட்டா மாறுதல் செய்யக்கோரி அறநிலையத்துறை சுசீந்திரம் இணை கமிஷனர், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி முகமது ஷபீக்: ஆர்.டி.ஓ.,விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.