உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நினைவேந்தல் நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வு

மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. பொருளாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கிளைத் தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். மறைந்த நிர்வாகிகள் ஆனந்த், கோபாலகிருஷ்ணன் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மா.கம்யூ., உறுப்பினர்கள் பாலா, கண்ணன், சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்புறா, செயலாளர் லெனின், சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன், கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் அடங்கி வீரணன் உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி