தொடர் சாரல் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
தொடர் சாரல் மழையால்கொப்பரை உற்பத்தி பாதிப்புகாங்கேயம், டிச. 1-காங்கேயம் சுற்றுப்பகுதியில் தொடர் மழையால், கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள், 800க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியில் தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணி நடக்கிறது. தொடர்மழை காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலும் பாதிப்படும். இந்நிலையில் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால், தேங்காய் உடைத்து உலர்த்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து, தார்ப்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டது.