அம்மாபட்டியில் கறிவிருந்து
திருமங்கலம்: திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான காவல் தெய்வமாக உள்ள சடச்சியம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். நேற்று நடந்த திருவிழாவில் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டு கறி விருந்து தயார் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. சமபந்தி முறையில் அனைத்து மக்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.