குன்றத்து கோயிலில் ரூ.48.68 லட்சம் காணிக்கை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 48,68,441. தங்கம் 171 கிராம், வெள்ளி 2510 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,மாணவியர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.