உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்குழுக் கூட்டம்

செயற்குழுக் கூட்டம்

மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் தமிழையா மாதாந்திர மற்றும் நிதிநிலை அறிக்கை வாசித்தார். உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய நிலுவை தொகையை சங்கம் சார்பில் வாங்கி கொடுத்தது, சங்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் தேவைகள் குறித்து செயல் தலைவர் மணி, துணைத்தலைவர் சிதம்பரம், நிர்வாகிகள் பேசினர். 2025 ஜூலை முதல் மத்திய அரசு வழங்கிய அகவிலை படியை உடனே தமிழக அரசு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி நம்பிராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ