பேப்பர் கோடவுனில் தீ
மதுரை: மதுரை ஓபுளா படித்துறை வைகை தென்கரையில் சுப்பிரமணியபுரம் உமர் என்பவரின் பழைய பேப்பர் கோடவுன் உள்ளது. இரண்டு மினி சரக்கு வாகனத்தை பேப்பர் லோடுடன் நேற்று மாலை கோடவுனில் நிறுத்தி இருந்தார்கள். நேற்று காலை 8:30 மணியளவில் கோடவுனில் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. மினி சரக்கு வாகனங்களும் எரிந்தன. உயிர் சேதம் இல்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். காரணம் குறித்து விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.