உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விமானத்தில் தீ: 2 பேர் பலி

விமானத்தில் தீ: 2 பேர் பலி

வாஷிங்டன் : மெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து பீச் பி.இ-.,35 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வருவதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த விமானம் தீப்பிடித்து அங்குள்ள பூங்காவில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உட்பட 2 பேரும் உடல் கருகி பலியாகினர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை