மேலும் செய்திகள்
51 பேருக்கு கண் பரிசோதனை
15-Sep-2025
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாப்புரெட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி லதா துவக்கி வைத்தார். காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் சிவா முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணன் வரவேற்றார். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் கொலஸ்டிகா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். 102 பேருக்கு கண் பரிசோதனை செய்ததில் 50 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜெய்கர் நன்றி கூறினார்.
15-Sep-2025