உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சினிமாவில் அவதுாறு என மனு ஐகோர்ட் கிளை தள்ளுபடி

சினிமாவில் அவதுாறு என மனு ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன், வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி முறையிட்டதாவது:'சொர்க்கவாசல்' என்ற திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதுாறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. எனவே, படத்தின் இயக்குனர், நடிகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: இது ஏற்புடையதல்ல. சென்னை உயர் நீதிமன்ற அமர்வை அணுகலாம். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !