கராத்தேபயிற்சி முகாம்
மதுரை: பரவையில் சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம், கராத்தே தேர்வு நடந்தது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, கிருஷ்ணகிரி, ஒசூரைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் தேர்வை நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சஞ்சய்காந்தி, மணிமுத்து சான்றிதழ் வழங்கினர். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில், துாத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துராஜா ஏற்பாடுகளை செய்தனர்.