வீரராகவ பெருமாள் கோயிலில் அக்., 24ல் கும்பாபிஷேகம்
மதுரை: மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அக்., 24ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் மன்னர் திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உப கோயிலான இக்கோயிலில் அக்., 24 காலை 9:48 முதல் 10:28 மணிக்குள் புதிய ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.