உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து முருகனுக்கு நாளை பட்டாபிேஷகம்

குன்றத்து முருகனுக்கு நாளை பட்டாபிேஷகம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 6ம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர்.வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவலிநாயகர், திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர்.அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் ரத வீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர்.நாளை (டிச. 12) மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. டிச. 13 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி