கல்லுாரியில் சொற்பொழிவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை பல்கலை சார்பில் வைரமுத்து அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், உபதலைவர் ஜெயராம், செயலாளர் விஜயராகவன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மாணவி சந்தியா வரவேற்றார். கல்லுாரி தமிழ் உயராய்வு மைய துறைத் தலைவர் காயத்ரி தேவி அறிமுக உரையாற்றினார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழ்த் துறைஉதவி பேராசிரியர் கணேஷ் பிரபு பேசினார். மாணவிகள் கிருஷ்ணகுமாரி, தீபிகா தொகுத்துரைத்தனர். பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா, திருஞானசம்பந்தம், முனியசாமி பங்கேற்றனர்.